தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐஎம், சிபிஐ, விசிக, உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி இன்று இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் மனிதனை மனிதனே தூக்கிச் செல்லும் மனிதத் தன்மையற்ற மனித உரிமை மீறலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு கட்சிகள் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்விற்குக் கடந்தாண்டும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில் தடை விதிக்கப்பட்டு மீண்டும் தடை நீக்கப்பட்டது